திருப்பூரில் அரசுப் பேருந்தில் "லிவிங் டுகெதர்" காதலியுடன் சண்டையிட்ட இளைஞன்

0 689

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் திருமணம் செய்துகொள்ளாமல் "லிவிங் டுகெதர்" வாழ்க்கை வாழ்ந்து வந்ததாகக் கூறப்படும் ஜோடிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், அரசுப் பேருந்தில் அமர்ந்திருந்த பெண்ணுடன் சண்டையிட்ட இளைஞன், தனது கைகளை பிளேடால் கிழித்துக் கொண்டார்.

இளைஞருடன் 2 மாதங்களாக லிவிங் டுகெதரில் வாழ்ந்து வந்ததாகக் கூறப்படும் அந்தப் பெண், கருத்து வேறுபாடு காரணமாக அரசுப் பேருந்தில் கோவை புறப்பட்டுள்ளார்.

பைக்கில் பின் தொடர்ந்து சென்று பேருந்தில் ஏறிய இளைஞன், அப்பெண்ணுடன் வாக்குவாதம் செய்து ஒரு கட்டத்தில் மறைத்து வைத்திருந்த பிளேடால் அவர் தனது கையைக் கிழித்துக் கொண்ட நிலையில், ஓட்டுநர் பேருந்தை காவல் நிலையம் கொண்டு சென்று இருவரையும் போலீசாரிடம் ஒப்படைத்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments